நடிகை குஷ்பு 2005ம் ஆண்டு பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் திருமணத்துக்கு முந்தைய செக்ஸ் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அவரது பேச்சு அன்றைய தினம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இது தொடர்பாக குஷ்புவின் மீது பல்வேறு தரப்பின் கீழ் 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
ஆனால் தனது கருத்தில் விடாபிடியாக இருந்த குஷ்பு, இதுதொடர்பான வழக்கை சந்தித்து வந்தார். இந்நிலையில் சுஹாசினி குஷ்பூவிற்கு ஆதரவாக பேசியிருந்ததன் காரணமாக நடிகை சுஹாசினி மீது பல்வேறு தரப்பில் 8 வழக்குகள் தொடரப்பட்டன.
குஷ்பு மீதான வழக்குகள் அனைத்தையும் கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது இதன் தொடர்ச்சியாக சென்னை ஐகோட்டில் நடைபெற்ற வழக்கு விசாரனையில் நடிகை சுஹாசினி மீது தொடரப்பட்ட 8 வழக்குகளும் ரத்து செய்யப்பட்டது.. மேலும் நடிகை சுஹாசினி மீது தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் உள்நோக்கத்துடன் தொடரப்பட்டது எனவும் ஐகோட் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Photos
Listing1-1of1
External Links
Not Available
What people think about "நடிகை சுஹாசினி மீதான 8 வழக்குகள் ரத்து" ?