விண்கற்களில் தண்ணீர் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிலவில் தண்ணீர் இருக்கிறது என்பதை இந்தியாவின் சந்திராயன் கண்டுபிடித்தது. இது போன்று சூரியனை சுற்றி வரும் பல்வேறு கோள்களிலும் தண்ணீர் இருக்கிறதா? என்று ஆராய்ச்சிகள் நடத்தப்படுகிறது. சூரியனை சுற்றி வரும் கோள்களை தவிர ஏராளமான விண்கற்களும் விண்ணில் சுற்றி வருகின்றன. இவற்றில் பல கற்கள் ராட்சத அளவில் இருக்கின்றன.
200 கிலோ மீட்டருக்கு மேல் அகலமாக உள்ளது. கற்களை அமெரிக்க நாசா விண்வெளி விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். தற்போது அதில் தண்ணீர் இருப்பது தெரிய வந்துள்ளது. உறைந்த நிலையில் மேல் பகுதிகளில். தண்ணீர் இருப்பதால் இதில் உயிரினங்கள் வாழ வாய்ப்பு இருக்கலாம் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதுபற்றியும் ஆய்வு நடந்து வருகிறது.